தென்னை நார் மில்லில் தீ
நத்தம் : செல்லப்பநாயக்கன்பட்டியில் குட்டக்கருப்பு கோவில் அருகே நத்தம் அண்ணா நகரை சேர்ந்த கண்ணன் 42, சொந்தமான தென்னை நார் மில் ஒன்று உள்ளது. மின்ஒயர்கள் நாரில் உரசி தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.