முத்துமாரியம்மன் கோயில் விழாவில் பூப்பல்லக்கு
வத்தலக்குண்டு: முத்துமாரியம்மன் கோயில் திருவிழா மே 6ல் கம்பம் நடுதல், மறுநாள் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து முத்துமாரியம்மன் பல்வேறு மண்டபணிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று முன்தினம் விழா துவங்கியது. ஆயிரவைசிய சமூகத்தினரால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் அம்மன் வீதி உலா வந்தார். நேற்று தீச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.