மேலும் செய்திகள்
ஆடி வெள்ளி: கோயில்களில் குவிந்த பக்தர்கள்
19-Jul-2025
நத்தம்: நத்தம் அசோக் நகர் பகவதியம்மன் கோயிலில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டும்,உலக நன்மை வேண்டியும் திருவிளக்கு பூஜை நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்ய 16 வகையான அபிஷேகம், தீபாராதனை நடந்தது. கோயிலில் உள்ள பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. அசோக்நகர் பகுதியை சேர்ந்த 50-க்கு மேற்பட்ட பெண்கள் விளக்கு பூஜையில் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
19-Jul-2025