புதிய சி.இ.ஓ., பொறுப்பேற்பு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட புதிய முதன்மை கல்வி அலுவலராக பெரம்பலுார் மாவட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலராக (இடைநிலை) பணியாற்றி பதவி உயர்வு பெற்ற செல்வக்குமார் நேற்றுபொறுப்பு ஏற்றார். மாவட்ட கல்வி அலுவலர்கள் அமுதா, பரிமளா, மெட்ரிக் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் பிரிட்டோ, நேர்முக உதவியாளர்கள் சுரேஷ்பாபு, நாகராஜன், தேர்வுத்துறை உதவி இயக்குநர் நாகராஜ், அலுவலக கண்காணிப்பாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.