செய்தி சில வரிகளில் ... பொது மருத்துவ முகாம்
வடமதுரை : பிலாத்தில் வேடசந்துார் வீரா சாமிநாதன் அறக்கட்டளை, திண்டுக்கல் கே.டி.மருத்துவமனை இணைந்து பொது மருத்துவ முகாம் நடத்தின. அறக்கட்டளை நிறுவனர் வீரா சாமிநாதன் துவக்கி வைத்தார். டாக்டர் துரை தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்தனர். தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்பையன், நகர செயலாளர் கணேசன், ஒன்றிய பொருளாளர் செந்தில் முருகன், இளைஞர் அணி அமைப்பாளர் கே.பி.சிவா, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் சொக்கலிங்கம் பங்கேற்றனர்.