புறக்காவல் நிலையங்கள் புஸ்...செயலிழந்த ஷெட்டுகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆங்காங்கு புறக்காவல் நிலையங்கள் செயல்படுகின்றன. இதற்காக ரூ. லட்சக்கணக்கில் ெஷட்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.எல்லாம் துவங்கப்பட்டதோடு சரி. திருட்டு ,மோதல் போன்ற நேரங்களில் தகவல் கொடுக்க செல்வோருக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. போலீசாரே இருப்பதில்லை.எதற்காக அமைக்கப்பட்டது என்ற நோக்கமே இல்லாமல் காட்சிப்பொருளாகி வருகிறது. ெஷட்டும் வீணாகி வருகிறது. புறக்காவல் நிலையங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட போலீஸ் நிர்வாகம் முன் வர வேண்டும்.