ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்: 70வயது ஓய்வூதியர்கள் அனைவருக்கும் 10சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்கவேண்டும், தொகுப்பூதிய ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ரூ.7ஆயிரத்து 850 வழங்கவேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்துதுறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத்தலைவர் ஜெயசீலன் தலைமை வகித்தார். செயலாளர் அமல்ராஜ், மணிக்காளை முன்னிலை வகித்தனர். மாநில தணிக்கையாளர் ராமமூர்த்தி பேசினார். மாவட்ட துணைத்தலைவர் வனசேகரன், பொருளாளர் ரவிச்சந்திரன் கலந்துக்கொண்டனர்.