போலீஸ் செய்திகள் ஊராட்சி மின் ஒயர் திருட்டு
வடமதுரை : மோர்பட்டி ஊராட்சி கோப்பம்பட்டி மேல்நிலைத் தொட்டிக்கு ஆழ்துளை கிணறு மூலம் நீரேற்றம் செய்து வினியோகம் நடக்கிறது. இதன் மூலமே இந்திரா காலனி அருகில் இருக்கும் ஊராட்சி மரக்கன்று வளர்ப்பு திட்டத்திற்கும் நீர் வழங்கப்படுகிறது. இங்கிருந்த 150 மீட்டர் துாரமுள்ள மின்சார கேபிளை சிலர் திருடி சென்றனர். ஏ.பி.டி.ஓ., சுப்பிரமணி வடமதுரை போலீசில் புகார் செய்தார்.