உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பிரத்தியங்கிரா தேவி யாகம்

பிரத்தியங்கிரா தேவி யாகம்

கோபால்பட்டி: - சாணார்பட்டி மேட்டுக்கடை மல்லத்தான்பாறை ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் மாசி மாத அமாவாசையான நேற்று நடந்த பிரத்தியங்கிரா தேவி மிளகாய் யாகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.நேற்று காலை முதல் சபையில் வளர்க்கப்படும் நாட்டு மாடுகளுக்கு பக்தர்கள் அகத்திக்கீரை உணவுகள் வழங்கி கோ பூஜை நடந்தது. மாலையில் மடத்தில் உள்ள யாகசாலையில் நரசிம்மர் கலசங்களுக்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பிரத்தியங்கிரா தேவி அம்மன் பூக்கள் அலங்காரத்தில் எழுந்தருள சிறப்பு பூஜைகள் நடந்தது. சபை நிர்வாகி திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் வேத மந்திரம் முழங்க யாகுண்டத்தில் மூடைகளில் மிளகாய் வத்தலை கொட்ட பிரத்தியங்கிரா தேவி யாகம் உலக நன்மை வேண்டி நடத்தப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ