உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நுாறுநாள் வேலை கோரி மறியல்..

நுாறுநாள் வேலை கோரி மறியல்..

நத்தம்: நத்தம் அருகே முளையூர் கிராமத்தில் ஒரு சிலருக்கு மட்டும் நுாறு நாள் வேலை வழங்கப்பட்டு வரும் நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், அனைவருக்கும் நுாறுநாள் திட்ட வேலையை முறையாக வழங்ககோரியும் நேற்று காலை அலங்காநல்லுார்- நத்தம் ரோட்டில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். எஸ்.ஐ., தர்மர் உள்ளிட்ட போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அனைவருக்கும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூற கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை