பழநி கோயிலில் செப்.7ல் பூஜை நேரம் மாற்றம்
பழநி:பழநி முருகன் கோயிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு செப்.7 ல் தங்கரத புறப்பாடு, ராக்கால பூஜை நேரம் மாற்றப்பட்டு உள்ளது. பழநி முருகன் கோயிலில் தினமும் இரவு 7:00 மணிக்கு தங்கரத புறப்பாடு நடைபெறும். ராக்கால பூஜை இரவு 9:00 மணிக்கு நடைபெறும். செப்.7., அன்று இரவு 9:57 மணி முதல் நள்ளிரவு 1:26 மணி வரை பூரண சந்திர கிரகணம் நிகழ்கிறது. இதனை முன்னிட்டு அன்று மாலை 6:30 மணிக்கு தங்கரத புறப்பாடு நடைபெறும். இரவு 7:45 மணிக்கு ராக்கால பூஜை நடைபெறும். இரவு 8:00 மணிக்கு அனைத்து சன்னதிகளும் அடைக்கப்படும். பக்தர்கள் படிப்பாதை, வின்ச், ரோப்காரில் இரவு 7:00 மணிவரை அனுமதிக்கப்படுவர். செப்.8 அதிகாலை 4:00 மணிக்கு மேல் சம்ப்ரோக்ஷண பூஜை, வழக்கமான பூஜைகளுக்குப்பின் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.