ரோப் கார் நாளை இயங்காது
பழநி: பழநி முருகன் கோயில் செல்ல பயன்பட்டு வரும் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (ஜன.21) நிறுத்தப்பட உள்ளது. பழநி முருகன் கோயில் சென்றுவர ரோப் கார், வின்ச், படிப்பாதை, யானைப்பாதை உள்ளன. இதில் ரோப் கார் சேவையில் மூன்று நிமிடத்தில் மலைக்கோயில் செல்ல முடியும். தினமும் ஏராளமான பக்தர்கள் இச்சேவையை பயன்படுத்தி வருகின்றனர். மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை ஒரு நாள் மட்டும் ரோப்கார் இயங்காது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.