கொடையில் அதிகரிக்கும் பள்ளி மாணவர்கள் வருகை
கொடைக்கானல்: கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் பள்ளி மாணவர்கள் குவிந்தனர். நேற்று சென்னை,பிற மாவட்டத்தை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் ஏராளமனோர் பூங்காவிற்கு வருகை தந்தனர். இங்குள்ள புல்வெளி, மலர்களை ரசித்தனர். தொடர்ந்து சிறுவர் விளையாட்டுத் திடலில் விளையாடி மகிழ்ந்த னர். மாணவர்கள் வருகையால் பூங்கா நிறைந்து காணப்பட்டது. மிதமான வெயிலுடன் ரம்யமான சீதோஷ்ண நிலையை மாணவர்கள் அனுப வித்தனர்.