தன்னம்பிக்கை பயிலரங்கம்
பட்டிவீரன்பட்டி : கே.சிங்காரக்கோட்டை பி.வி.பி., கல்லுாரியில் தமிழ்நாடு அரசு கள்ளர் சீரமைப்புத் துறை சார்பில் வானம் வசப்படும் எனும் தன்னம்பிக்கை பயிரலங்கம் நடந்தது. கள்ளர் சீரமைப்புத் துறை இணை இயக்குனர் முனுசாமி தலைமை வகித்தார். பி.வி.பி., கல்லுாரிகளின் தலைவர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் தெய்வராஜ் வரவேற்றார். சாய்ஸ் அகடாமி நிறுவனர் முத்துகணேஷ்நன்றி கூறினார்.