கருத்தரங்கு
திண்டுக்கல்: நத்தம் சாலையில் உள்ள அரசு ஐ.டி.ஐ.,-ல் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாணவர்களின் பங்கு, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளுதல், மரம் நடுதல், பிளாஸ்டிக் ஒழிப்பு தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. முதல்வர் ஜெயத்ரட்சக ராஜா ராஜன் தலைமை வகித்தார். பயிற்சி அலுவலர் ஜெயகுமார் வரவேற்றார். பேராசிரியர் ரவிச்சந்திரன் பேசினார். பயிற்றுனர் ஜாம்சன், மாணவர்கள் கலந்துகொண்டனர்.