உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அறுபடை வீடு சுற்றுப்பயணம் நிறைவு

அறுபடை வீடு சுற்றுப்பயணம் நிறைவு

பழநி: ஹிந்து சமய அறநிலை துறை சார்பில் அறுபடைவீடு ஆன்மிக சுற்றுப்பயணத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை மண்டல பக்தர்கள் 240 பேர் அனுமதிக்கப்பட்டனர். ஜன.20ல் திருசெந்துாரில் துவங்கிய பயணம் திருப்பரங்குன்றம், சோலைமலை முருகன் கோயில், சுவாமி மலை, திருத்தணி கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் பக்தர்கள் பழநி வந்து தங்கினர். நேற்று காலை பழநி முருகன் கோயிலில் தரிசனம் செய்தனர். அதன் பின் சொந்த ஊருக்கு திரும்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி