மேலும் செய்திகள்
முருகன் கோயில்களில் கார்த்திகை சிறப்பு வழிபாடு
07-Nov-2025
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட முருகன் கோயில்களில் தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு, அலங்காரம், அபிேஷகம் நடந்தது. அபிராமி அம்மன் கோயிலுள்ள ஆறுமுகப் பெருமான் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம் , தீபாராதனை நடந்தன. ரயிலடி சித்தி விநாயகர் கோயில் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகம் நடைபெற்றது. பால தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், கந்தக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி, என்.ஜி.ஓ., காலனி முருகன் கோயில், மேட்டுராஜக்காபட்டி சுப்ரமணிய சுவாமி, குள்ளனம் பட்டி முருகன் உள்ளிட்ட முருகன் கோயில்களில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.
07-Nov-2025