காத்திருப்பு போராட்டம்
பழநி:பழநி ஆயக்குடி கொய்யா மார்க்கெட் பகுதியில் சி.பி.ஐ.எம்.எல்., சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். ஆயக்குடி விவசாய நிலங்களில் சட்ட விரோதமாக மண் அள்ளியவர்கள், துணை போன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இரவு வரை போராட்டம் நீடித்தது.