உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பாசனத்திற்காக பழநி பாலாறு பொருந்தலாறு அணை நீர் திறப்பு

பாசனத்திற்காக பழநி பாலாறு பொருந்தலாறு அணை நீர் திறப்பு

பழநி: 9600 ஏக்கர் பாசனத்திற்காக பழநி பாலாறு-பொருந்தலாறு அணை நீர் திறக்கப்பட்டது.பழநி சுற்றுப்பகுதி பாசனத்திற்காக பாலாறு- பொருந்தலாறு அணையிலிந்து மே.3 வரை 110 நாட்களுக்கு வினாடிக்கு 70 கன அடி வீதம் 665.30 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி அணை நீரை இடது பிரதான கால்வாய் வழியாக உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் சக்கரபாணி, பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார் திறந்து விட்டனர். சப் கலெக்டர் கிஷன்குமார், செயற்பொறியாளர் பாலமுருகன், உதவி செயற் பொறியாளர் உதயகுமார், பாசன விவசாயிகள் கலந்து கொண்டனர்.அணை நீர் மூலம் புதிய ஆயகட்டு பாசன பகுதிகளில் உள்ள பெரியம்மாபட்டி, இரவிமங்கலம், தாதநாயக்கன்பட்டி தெற்கு, நெய்க்காரப்பட்டி, சின்ன கலையம்புத்துார், பெத்தநாயக்கன்பட்டி, சுக்கம்மநாயக்கன்பட்டி, மானூர், தாதநாயக்கன்பட்டி வடக்கு, சித்திரை குளம், தாழையூத்து, கொழுமம் கொண்டான், கோரிக்கடவு, கோயில் அம்மாபட்டி, மேல்கரைப்பட்டி, அக்கரைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 9 600 ஏக்கர் நிலங்கள் பயனடையும். தற்போது அணையின் 64.37 அடி (65 அடி) நீர் இருப்பு உள்ளது. நீர் வரத்து 20 கன அடியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை