வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இந்த கேள்வி எல்லா இடங்களிலும் எழுப்பப்படவேண்டும்
விஷம் வெச்சுதான் கொல்லணும். இல்லேனா உரிமையாளர்கள் கண்டுக்கவே மாட்டாங்க.
மாவட்டத்தில் முக்கிய ரோடுகள், நான்கு வழி சாலைகள், நெடுஞ்சாலைகள்,ரயில் பாதைகளில் சுதந்திரமாக உலா வரும் மாடுகள் விபத்தில் சிக்கி அவ்வப்போது உயிரைவிடுகின்றன. சாலையோரம் கொட்டப்படும் குப்பையை கிளறி பாலிதீன் துணிகள் போன்றவற்றை உட்கொள்கின்றன. இதனால் மாடுகளுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. நகர் புறங்களில் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலம் இல்லாததாலும், உணவு பற்றாக்குறையாலும் அதன் உரிமையாளர்கள் மாடுகளை கண்டு கொள்வதில்லை. அவை நடுரோட்டில் கூட்டமாக திரிவதால் வாகனங்களில் வருபவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். கை கால் இழப்பு முதல் உயிரிழப்புகள் வரை நிகழ்கிறது. மருத்துவமனை வளாகங்கள் ,கோயில் ,பள்ளி என மாடுகள் சுற்றித் திரிவதால் சில நேரம் பள்ளி சிறுவர்களை தாக்குகிறது. இதனால் பள்ளிகளுக்கு குழந்தைகளை அச்சத்துடன் அனுப்பும் நிலை உள்ளது. உள்ளாட்சி நிர்வாகங்களோ ரோட்டில் சுற்றி திரியும் மாடுகளை பறிமுதல் செய்கின்றனர். உரிமையாளர்கள் வரும் போது எச்சரித்து மாடுகளை ஒப்படைக்கின்றனர். சில உள்ளாட்சி அமைப்புகள் அதையும் கண்டு கொள்வதில்லை. இதனால் மாட்டின் உரிமையாளர்கள் மாடுகளை முறையாக பராமரிக்காமல் மீண்டும் ரோடுகளில் திரியவிடுகின்றனர்.கால்நடைகளை முறையாக பராமரிக்காமல் ரோடுகளில் திரியவிடும் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த கேள்வி எல்லா இடங்களிலும் எழுப்பப்படவேண்டும்
விஷம் வெச்சுதான் கொல்லணும். இல்லேனா உரிமையாளர்கள் கண்டுக்கவே மாட்டாங்க.