பணி ஆணை வழங்கும் விழா
வேடசந்துார்: வேடசந்தூர் ஒன்றிய அலுவலகத்தில் பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கான பணி ஆணை வழங்கும் விழா நடந்தது. 15 பயனாளி களுக்கு தலா ரூ.2.80 லட்சம் மதிப்பிலான பணி ஆணைகளை எம்.எல்.ஏ., காந்திராஜன் வழங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், குமரன், தி.மு.க., மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், பேரூர் செயலாளர் கார்த்திகேயன், விவசாய அணி அமைப்பாளர் மருதபிள்ளை, தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் ஆரோன், துணை செயலாளர் கவிதாமுருகன், ஒன்றிய பொருளாளர் நாகப்பன், நிர்வாகிகள் பொன்ராம், சாகுல் ஹமீது, காட்டு பாவா சேட், பாண்டியன், முத்துக்கிருஷ்ணன், மணிமாறன், முருகவேல் பங்கேற்றனர்.