உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போதை பொருட்கள் இல்லா தமிழகம்ஆப் மூலம் புகார் தெரிவிக்க அழைப்பு போதை பொருட்கள் இல்லா தமிழகம்ஆப் மூலம் புகார் தெரிவிக்க அழைப்பு

போதை பொருட்கள் இல்லா தமிழகம்ஆப் மூலம் புகார் தெரிவிக்க அழைப்பு போதை பொருட்கள் இல்லா தமிழகம்ஆப் மூலம் புகார் தெரிவிக்க அழைப்பு

'போதை பொருட்கள் இல்லா தமிழகம்'ஆப் மூலம் புகார் தெரிவிக்க அழைப்புஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் மது, போதை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தொடர்பான புகார்களை மாணவர்கள், பொதுமக்கள், 'போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு (DRUG FREE TN)' என்ற கைபேசி செயலியில் தெரிவிக்கலாம். அனைத்து பள்ளி, கல்லுாரி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்களுக்கும் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், https://admin.drugfree.tn.comஎன்ற இணைய தளம் மூலம் இதற்கான தீர்வு மேற்கொள்ளப்படும். புகார் அளிக்கும் நபரின் அடையாளம் ரகசியம் காக்கப்படும். புகார் மீதான நடவடிக்கையை வெளிப்படையாக தெரிந்து கொள்ள இயலும். இதுபற்றி கண்காணிக்க, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டி.எஸ்.பி., - இன்ஸ்பெக்டர்கள் கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை