உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நாய்கள் கடித்து ௬ ஆடுகள் பலி: விவசாயிகள் போராட்டம்

நாய்கள் கடித்து ௬ ஆடுகள் பலி: விவசாயிகள் போராட்டம்

நாய்கள் கடித்து ௬ ஆடுகள் பலி: விவசாயிகள் போராட்டம்காங்கேயம், அக். 22-காங்கேயத்தை அடுத்த குள்ளம்பாளையம் செட்டிகாட்டு தோட்டத்தை சேர்ந்தவர் பழனிசாமி, 65; தோட்டத்தில், 30 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை மேய்ச்சலுக்காக தோட்டத்தில் விட்டிருந்தார். அப்போது தெருநாய்கள் கடித்ததில் ஐந்து ஆடுகள் பலியாகின. ஐந்து ஆடுகள் காயமடைந்தன. அப்பகுதியை சேர்ந்த மணி என்பவரின் நாய் கடித்துதான் ஆடுகள் இறந்ததாக கூறி, அவரது வீட்டில் முன்னால் ஆடுகளை போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல வீரணம்பாளையம் ஊராட்சி சூலக்கல் புதுாரில், சிதம்பரம் என்பவருக்கு சொந்தமான பட்டியில் நேற்று காலை புகுந்து நாய்கள் கடித்ததில் ஒரு ஆடு பலியானது. இரண்டு குட்டிகள் காணாமல் போய்விட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி