உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு

கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு

கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு பவானிசாகர், :பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி வாய்க்காலில் இரண்டாம் போக புன்செய் பாசனத்துக்கு கடந்த, 10ம் தேதி முதல் சுழற்சி முறையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வாய்க்காலில், 2,300 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில், 2,000 கன அடியாக நேற்று குறைக்கப்பட்டது. அரக்கன்கோட்டை-தடப்பள்ளி பாசனத்துக்கு, 650 கன அடி தண்ணீர்; குடிநீருக்காக, 100 கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் திறக்கப்படுகிறது. மாலை நிலவரப்படி அணை நீர்வரத்து, 441 கன அடியாக இருந்தது. அணை நீர்மட்டம், 95.20 அடி; நீர் இருப்பு, 25.1 டி.எம்.சி.,யாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி