உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போலீஸ் பாதுகாப்பு கேட்டுசுயேட்சை வேட்பாளர் மனு

போலீஸ் பாதுகாப்பு கேட்டுசுயேட்சை வேட்பாளர் மனு

போலீஸ் பாதுகாப்பு கேட்டுசுயேட்சை வேட்பாளர் மனுஈரோடு, : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், கோவையை சேர்ந்த நுார் முகம்மது, சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்திடம், நேற்று மனு வழங்கினார். அதில், 'எனக்கு பல்வேறு மர்ம நபர்களிடம் இருந்து அச்சுறுத்தல் வருகிறது. இதனால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனக்கு உடனடியாக ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். அச்சுறுத்தலால் தற்போது வரை பிரசாரம் மேற்கொள்ள இயலாத நிலை தொடர்கிறது' என, கூறியுள்ளார். கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பெண் சுயேட்சை வேட்பாளரின் மனுவை ஏற்க எதிர்ப்பு தெரிவித்து, மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை