உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோபி, அந்தியூர், சென்னிமலையில் மழை

கோபி, அந்தியூர், சென்னிமலையில் மழை

கோபி, அந்தியூர், சென்னிமலையில் மழைகோபி:கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில், நேற்று காலை முதல், வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. இந்நிலையில், கோபி பஸ் ஸ்டாண்டு, குள்ளம்பாளையம், நாதிபாளையம், பொலவக்காளிபாளையம், கவுந்தப்பாடி உள்ளிட்ட பகுதியில் நேற்று மாலை 4:00 மணிக்கு லேசான துாரல் மழை பெய்தது. அதன்பின் இரவு நேரத்தில் வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது.அந்தியூர் சுற்று வட்டாரத்தில், நேற்று மிதமான மழை பெய்தது. அந்தியூர், தவிட்டுப்பாளையம், சங்கராப்பாளையம், மைக்கேல்பாளையம், அண்ணாமடுவு, மாத்துார், வெள்ளித்திருப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் மதியம், 2:45 மணிக்கு மிதமான மழை பெய்தது. அரைமணி நேரம் நீடித்த மழையால், குளிர்ச்சி நிலவியது. கடந்த இரு நாட்களாக அந்தியூர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.* சென்னிமலை டவுன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கடுமையான வெயில் சுட்டெரித்தது. மக்கள் கடும் அவதிப்பட்டனர். இந்நிலையில் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பகல் 1:30 மணி அளவில் பலத்த இடி சத்தத்துடன் மழை பெய்ய தொடங்கியது. மாலை 5 மணி வரை துாரல் மழை நீடித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ