மேலும் செய்திகள்
இலக்கிய திறனறி தேர்வு ஹெச்.எம்.,களுக்கு அறிவுரை
16-Oct-2024
தமிழ் இலக்கிய திறனறி தேர்வில்9,168 மாணவர்கள் பங்கேற்புஈரோடு, அக். 20-பள்ளி கல்வித்துறை சார்பில், தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்தும் வகையில் பிளஸ் 1 மாணவ, மாணவியருக்கு, தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு, மாநில அளவில் நேற்று நடந்தது. ஈரோடு மாவட்டத்தில், 37 மையங்களில் தேர்வு நடந்தது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., பள்ளிக என, 9,454 மாணவ, மாணவியர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் நேற்று நடந்த தேர்வில், 286 பேர் பங்கேற்கவில்லை. 9,168 பேர் மட்டுமே பங்கேற்றனர். ஓ.எம்.ஆர்., விடைத்தாள் முறையில் தேர்வு நடந்தது.
16-Oct-2024