உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / திருட்டு வழக்கில் கைதானவாலிபர் மீது குண்டாஸ்

திருட்டு வழக்கில் கைதானவாலிபர் மீது குண்டாஸ்

திருட்டு வழக்கில் கைதானவாலிபர் மீது குண்டாஸ் ஈரோடு:கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தை சேர்ந்தவர் டேவிட் (எ) சொக்கலிங்கம், 31; திருட்டு வழக்கில் பவானி போலீசார் கைது செய்து, மாவட்ட சிறையில் அடைத்தனர். இவர் மீது திருட்டு உள்ளிட்ட, 18 வழக்குகள் உள்ளன. இவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய, எஸ்.பி., ஜவகர் பரிந்துரைத்தார். இதை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஏற்றதால், சொக்கலிங்கம் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதையடுத்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி