உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வெள்ளகோவில் அருகேநாய் கடித்து 7 ஆடு பலி

வெள்ளகோவில் அருகேநாய் கடித்து 7 ஆடு பலி

வெள்ளகோவில் அருகேநாய் கடித்து 7 ஆடு பலிவெள்ளகோவில்:வெள்ளகோவில் அரு உள்ள சேனாபதிபாளையம் கிராமம், கோட்டைவலசை சேர்ந்தவர் கந்தசாமி, 65; விவசாயியான இவர் ஐந்து ஏக்கர் தோட்டத்தில் பட்டி அமைத்து, 40 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் இரும்பு பட்டியில் ஆடுகளை அடைத்து சென்றார். நேற்று காலை பட்டிக்கு சென்றபோது ஏழு ஆடுகள் இறந்து கிடந்தன. நான்கு ஆடுகள் ரத்தக்காயத்துடன் இருந்தன. பட்டியின் அடிப்பாகத்தில் குழி பறித்து உள்ளே சென்று ஆடுகளை நாய்கள் கடித்துள்ளன. இறந்த ஆடுகளை பிரேத பரிசோதனை செய்து, தோட்டத்திலேயே புதைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி