உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மின் கம்பத்தை மாற்றக்கோரி மறியல்

மின் கம்பத்தை மாற்றக்கோரி மறியல்

மின் கம்பத்தை மாற்றக்கோரி மறியல்அந்தியூர்:வெள்ளித்திருப்பூர் அருகே மரவபாளையத்தில், 60க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், நுாற்றுக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர்.இப்பகுதியில் மின் வாரியத்தின் சார்பில் ஐந்துக்கும் மேற்பட்ட தெருவிளக்கு மின் கம்பங்கள் உள்ளன. இதில் பல கம்பங்கள் சேதமடைந்து, உடையும் நிலையில் உள்ளன. கம்பத்தை மாற்ற வெள்ளித்திருப்பூர் மின்வாரியத்துக்கு மக்கள் தகவல் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் அப்பகுதி மக்கள், 20க்கும் மேற்பட்டோர், மரவபாளையம் பஸ் நிறுத்தத்தில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். வெள்ளித்திருப்பூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை