தளவாய்பட்டினத்தில்மஞ்சுவிரட்டு ஜோர்
தளவாய்பட்டினத்தில்மஞ்சுவிரட்டு ஜோர்தாராபுரம்,:பொங்கல் பண்டிகையை ஒட்டி, தாராபுரத்தை அடுத்த தளவாய்பட்டினத்தில், மஞ்சுவிரட்டு நேற்று நடந்தது. இதில், 15க்கும் மேற்பட்ட காளைகளை, இளைஞர்கள் விரட்டினர். சிறப்பாக பங்களிப்பு செய்த காளைகளுக்கு, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பரிசு வழங்கினர். இதேபோல் ராமபட்டினம், சீராம்பாளையம் பகுதிகளிலும் மஞ்சுவிரட்டு உற்சாகத்துடன் நடந்தது.