உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விவசாய தொழிலாளர்கோபியில் ஆர்ப்பாட்டம்

விவசாய தொழிலாளர்கோபியில் ஆர்ப்பாட்டம்

விவசாய தொழிலாளர்கோபியில் ஆர்ப்பாட்டம்கோபி:தமிழ் மாநில விவசாய தொழிலாளர் நலச்சங்கம், கோபி ஒன்றியம் சார்பில், நுாறு நாள் வேலை திட்ட தொழிலாளர்களின், கோரிக்கையை வலியுறுத்தி கோபியில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் பரமேஸ்வரன் தலைமை வகித்தார். நுாறுநாள் வேலை செய்த அனைவருக்கும், கூலி பாக்கியை சட்டப்படி வட்டியோடு வழங்க வேண்டும். வேலை மறுக்கப்பட்ட நாட்களுக்கு, சட்டப்படி பிழைப்பு ஊதியம் வழங்க வேண்டும். வேலை நாட்களை குறைக்காமல், தொடர்ந்து வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை