ஆப்பக்கூடல்நால்ரோட்டில்வேகத்தடை அமைப்பு
ஆப்பக்கூடல்நால்ரோட்டில்வேகத்தடை அமைப்புபவானி:ஆப்பக்கூடல் நால்ரோட்டில், அந்தியூர் செல்லும் சாலையில் வேகத்தடை இல்லை. இதனால் வாகனங்கள் அதிவேகமாக வந்தன. விபத்து அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் தெரிவித்தனர். இதுகுறித்து நமது நாளிதழில் செய்தி வந்தது. இதன் எதிரொலியாக பவானி நெடுஞ்சாலைத்துறையினர், நால்ரோடு பகுதியில் நேற்று காலை வேகத்தடை அமைத்தனர்.