உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாரியம்மன் சிலை மீது இரண்டு நாட்களாக தங்கியுள்ள பாம்பு

மாரியம்மன் சிலை மீது இரண்டு நாட்களாக தங்கியுள்ள பாம்பு

காங்கேயம்: காங்கேயத்தை அடுத்த பரஞ்சேர்வழி ஊராட்சியில் பழமையான மாரியம்மன் கோவில் உள்ளது. தற்போது திருவிழாவுக்காக கோவிலில் பூச்சாட்டப்பட்டுள்ளது. இதனால் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பூஜை நடப்பது வழக்கம். கடந்த இரு நாட்களாக கருவறையில் உள்ள மூலவர் அம்மன் கழுத்தில், 3 அடி நீளமுள்ள நாகப்பாம்பு சுற்றியபடி உள்ளது. அருகில் சென்றால் சத்தம் எழுப்புகிறது. இதனால் பூசாரியே, கருவறைக்குள் செல்லாமல் பூஜை செய்து வருகிறார். பக்தர்களும் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை