உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொடுமுடியில் 16 மி.மீ., மழை

கொடுமுடியில் 16 மி.மீ., மழை

கொடுமுடியில் 16 மி.மீ., மழை ஈரோடு, டிச. 15-புயல் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக சாரல் மழை லேசாக பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக கொடுமுடியில், 16 மி.மீ., மழை பதிவானது. மாவட்டத்தில் பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): மொடக்குறிச்சி-11.20, ஈரோடு-2.70, பெருந்துறை-2, சென்னிமலை-14, பவானி-3.20, கவுந்தப்பாடி-1.40, அம்மாபேட்டை-1.20, வரட்டுபள்ளம் அணை-6.60, கோபி-6.20, எலந்தகுட்டை மேடு-4.40, கொடிவேரி-4, குண்டேரிபள்ளம் அணை-3.80, நம்பியூர்-1, சத்தி-5, பவானிசாகர்-4.80, தாளவாடி-2.40. ஈரோடு மாநகரில் நேற்று காலை வெயில் சுட்டெரித்தது. மதியம், 2:00 மணிக்கு பின் பனிமூட்டமாக காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி