மாநகராட்சி குறைதீர் கூட்டத்தில் 22 மனு
ஈரோடு, ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று மதியம் நடந்தது. மேயர் நாகரத்தினம் தலைமை வகித்தார். துணை மேயர், துணை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் சாலை, குடிநீர், தெருவிளக்கு பிரச்னை என, 22 மனு பெறப்பட்டது. மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டது.