போக்குவரத்து ஓய்வூதியர் நலச்சங்க 4வது மாநாடு
தாராபுரம் :தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர் நலச்சங்க நான்காவது மாநாடு, தாராபுரத்தில் நேற்று நடந்தது. சங்கத்தலைவர் வெள்ளைச்சாமி தலைமை வகித்தார். மாநில துணை பொது செயலாளர் செல்வராஜ் பேசினார். ஓய்வூதியர்களின் பணப்பலன்களை ஓய்வு பெறும் நாளிலேயே வழங்க வேண்டும்.ஓய்வு போக்குவரத்து ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். முழுமையான பஞ்சப்படி உயர்வுடன் நிலுவைத்தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. சங்க நிர்வாகிகள் கர்சன், நடராசன், முத்துசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.