உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கேட்பாரற்று கிடந்த பேக்கில் 600 கிராம் கஞ்சா சாக்லேட்

கேட்பாரற்று கிடந்த பேக்கில் 600 கிராம் கஞ்சா சாக்லேட்

ஈரோடு, போதை பொருள் கடத்தலை தடுக்கும் வகையில், ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில், ஈரோடு மதுவிலக்கு போலீசாரும் சோதனையில் ஈடுபடுகின்றனர். நேற்று முன்தினம் மாலை ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் ரோந்து சென்றபோது, நுழைவு வாயிலில் ஒரு பேக் கிடந்தது. அதை சோதனை செய்ததில், அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா சாக்லேட் இருந்தது. 600 கிராம் எடையிலான கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்து, பையை வீசி சென்றவர்களை, கண்காணிப்பு கேமராக்கள் காட்சி அடிப்படையில் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி