முன்னாள் மாணவர் சந்திப்பு
ஈரோடு, ஈரோடு அக்ரஹாரம் பகுதி அரசு உயர்நிலைப்பள்ளியில், 2003 முதல் 2008ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியில் நடந்தது. முன்னாள் மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். சக நண்பர்களை ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். திருமணமாகி இல்லத்தரசியாக உள்ள பெண்கள், குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் ஆசிரியர்கள் கலந்து கொண்டு, வகுப்பறையில் பாடம் நடத்தி அறிவுரை வழங்கினர். இறுதியில் சினிமா பாடல்களுக்கு நடனமாடி மகிழ்ந்தனர்.