போஸ்ட் மாஸ்டருக்கு தொல்லை கொடுத்த ஜோதிடர் கைது
அந்தியூர்:பெண் போஸ்ட் மாஸ்டருக்கு, தொந்தரவு கொடுத்த ஜோதிடர் கைது செய்யப்பட்டார்.ஈரோடு மாவட்டம், வெள்ளித்திருப்பூர் அருகே ஒலகடத்தை சேர்ந்தவர் ஷமாமா, 21. இவர், சென்னம்பட்டி அடுத்த முரளி கிளையில் போஸ்ட் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். சந்தைப்-பேட்டையை சேர்ந்த சண்முகம்,63; ஜோதிடர்.இவர், முரளி போஸ்ட் ஆபீஸ் கிளையில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். ஷமாமாவிடம் மொபைல் நம்பரை வாங்கிய சண்-முகம், அவரிடம் ஆபாசமாக பேசியுள்ளார். மேலும், ஷமா-மாவை பற்றி தரக்குறைவாகவும், ஆபாசமாகவும், உயரதிகாரிக-ளுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.தொடர்ந்து, தொந்தரவு செய்து வந்த சண்முகம் மீது நடவ-டிக்கை எடுக்குமாறு, வெள்ளித்திருப்பூர் போலீசில் ஷமாமா நேற்று புகாரளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், சண்மு-கத்தை கைது செய்து, பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.