பி.எஸ்.என்.எல்., ஊழியர் ஆர்ப்பாட்டம்
அந்தியூர்: பி.எஸ்.என்.எல்.,லில் செயல்பட்டு வரும் மூன்று சங்கத்தினர் இணைந்து, ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அந்தியூர், பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் நேற்று ஆர்ப்-பாட்டத்தில் ஈடுபட்டனர். கிட்டுசாமி தலைமை வகித்தார். ஊதியம் மற்றும் ஓய்வூதிய விகிதங்-களை உடனடியாக தீர்வு காண வேண்டும். ஒப்-பந்த பணியாளர்களுக்கு குறைந்தபட்ச இ.பி.எப்., மற்றும் இ.எஸ்.ஐ., திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.