கஞ்சா விற்றவர் கைது
பெருந்துறை, பெருந்துறை போலீசார், நேற்று முன்தினம் இரவு பணிக்கம்பாளையத்தில் ரோந்து சென்றனர். அப்போது, வாலிபர் ஒருவர் கஞ்சா விற்றுக் கொண்டு இருப்பதை கண்டுபிடித்து, அவரை கைது செய்தனர். விசாரணையில், அவர் மேற்கு வங்கமாநிலம், கஞ்சாபாரா பகுதியை சேர்ந்த கோபால் ஆரி, 21, என்பதும், இவர், பெருந்துறை ஐயப்பன் நகரில் தங்கியபடி, கஞ்சா விற்று வருவது தெரிந்தது.