ரூ.25.71 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு விற்பனை
காங்கேயம், வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில், ரூ.25.71 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை நடைபெற்றது.திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வெள்ளகோவில் விளாத்திகுளம், லாலாபேட்டை, திருச்சி, மதுரை, அப்பியம்பட்டி, முத்துார் பகுதி விவசாயிகள், 55 பேர், 41 ஆயிரம் கிலோ எடை கொண்ட தேங்காய் பருப்பை கொண்டு வந்திருந்தனர். இதில் முதல் தரம் அதிகபட்சமாக ஒரு கிலோ, 205.16 ரூபாய், இரண்டாம் தரம் ஒரு கிலaோ, 130.35 ரூபாய்க்கு ஏலம் நடைபெற்றது. மொத்தம், 25 லட்சத்து, 71 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.