உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சென்னிமலையில் தொடரும் பனிமூட்டம்

சென்னிமலையில் தொடரும் பனிமூட்டம்

சென்னிமலை: சென்னிமலையில் நேற்று காலை நீண்ட நேரம் கடும் பனிப்பொ-ழிவு நிலவியது. வழக்கமாக மார்கழி மாதத்தில் துவங்கும் குளிர் சீதோஷ்ணம் மற்றும் பனிப்பொழிவு தை மாதம் வரை நிலவும். அவ்வகையில் நடப்பாண்டு இரு மாதங்களாக அதிகாலையில் கடும் பனிப்பொ-ழிவு காணப்பட்டது. மாலை முதல் நள்ளிரவு வரை நீடித்த பனிப்-பொழிவு மற்றும் குளிர்காற்று அதிகாலையிலும் நீடித்தது.மாசி மாதம் பிறந்து மூன்று நாட்கள் கடந்த நிலையிலும், மார்கழி போன்றே நேற்றும் பனிப்பொழிவு காணப்பட்டது. கடுமையான குளிரும் நிலவியது. வெட்ட வெளியில் நிறுத்தப்பட்-டிருந்த வாகனங்களின் மேற்புறத்தில் மூடுபனி இறங்கி ஈரமாக காட்சியளித்தது. அதிகாலை முதல் கடும் பனிப்பொழிவுடன், பனிமூட்டமும் காணப்பட்டது. இதனால் எதிரே வரும் வாக-னங்கள், ரோட்டோர உயர்ந்த மரங்கள், கட்டடங்கள் கூட தெளி-வாக தெரியாத வகையில் பனிப்பொழிவு நிலவியது. சூரிய உத-யத்துக்குப் பிறகும், ௮:௦௦ மணி வரை பனியின் தாக்கம் இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை