உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாற்றுத்திறனாளிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், ஈரோடு, வீரப்பன்சத்திரத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட தலைவர் சாவித்திரி தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் மாரிமுத்து, தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட அமைப்பாளர் முருகேசன், மாவட்ட பொருளாளர் ராஜூ பேசினர்.பாலஸ்தீன மக்கள் மீதான போதை இஸ்ரேல் ராணுவம் நிறுத்த வேண்டும். ஆயுதங்களால் தாக்கி மனிதர்களை மாற்றுத்திறனாளிகளாக மாற்றக்கூடாது. குழந்தைகள், முதியவர்கள் என போரால் அழிவதை தடுக்க அனைத்து தரப்பினரும் முன்வர வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி