கீழ்பவானி வாய்க்காலில் பேரிடர் மீட்பு ஒத்திகை
புன்செய்புளியம்பட்டி, வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், வெள்ளத்தில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்து, சத்தி தீயணைப்பு துறை சார்பில், கீழ்பவானி வாய்க்காலில் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று செயல் விளக்கம் அளித்தனர். அவ்வாறு மீட்கப்பட்ட நபருக்கு முதலுவி சிகிச்சை அளிப்பதும் குறித்தும் விளக்கினர். வாய்க்காலில் தீயணைப்பு வீரர்கள் மீட்பு போல செயல் விளக்கம் அளித்தபோது உண்மை சம்பவம் என மக்கள் திரண்டனர். ஒத்திகை என தெரிந்ததும் கலைந்து சென்றனர்.