உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கன மழையால் பச்சை மலையில் மண் சரிவு மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல தடை

கன மழையால் பச்சை மலையில் மண் சரிவு மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல தடை

கன மழையால் பச்சை மலையில் மண் சரிவுமலைப்பாதையில் வாகனங்கள் செல்ல தடைகோபி, நவ. 7-தொடர் மழையால் ஏற்பட்ட மண் சரிவால், கோபி பச்சைமலை முருகன் கோவில் மலைப்பாதை வழியாக, பக்தர்கள் வாகனங்களில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டம், கோபி அருகே பிரசித்தி பெற்ற பச்சைமலை முருகன் கோவிலுக்கு, மலைப்பாதை வழியாகவும், படிக்கட்டு வழியாகவும் செல்லலாம். கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால், பச்சைமலை மலைப்பாதையில் உள்ள கோசாலை அருகே, கிழக்கு பகுதியில் சமீபத்தில் மண் சரிவு ஏற்பட்டது. தற்போது கந்த சஷ்டி, சூரசம்ஹாரம் விழாவை முன்னிட்டு, காப்பு கட்டிய பக்தர்கள் தினமும் மலைப்பாதை வழியாகவும், படிக்கட்டு வழியாகவும் வந்து செல்கின்றனர்.அதே சமயம் பச்சைமலை யில் இன்று (7ல்) சூரசம்ஹாரம், நாளை (8ல்) திருக்கல்யாண உற்சவம் என்பதால், மலைப்பாதை வழியாக ஏராளமான பக்தர்கள் செல்வர். தற்போது மண் சரிவு ஏற்பட்டுள்ள பகுதி பலவீனமாக இருப்பதால், மலைப்பாதை வழியாக இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பயணிக்க, அறநிலையத்துறையினர் தடை விதித்துள்ளனர். அதுகுறித்து மலை அடிவாரத்தில் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து அறநிலையத்துறையினர் கூறுகையில், 'சூரசம்ஹாரம் விழாவுக்கு பின், மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதி சீரமைக்கப்படும். மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதி பலவீனமாக இருப்பதால், பக்தர்கள் அவ்வழியே வாகனங்களில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ