இ.கம்யூ., பொதுக்கூட்டம்
பவானி:பவானி நகர இ.கம்யூ., கட்சியின் ஒன்றிய குழு சார்பில், பவானி, அந்தியூர் பிரிவில், பாலதண்டாயுதம், 53வது நினைவு நாள் பொதுக்கூட்டம் நடந்தது. சி.பி.ஐ.,மாநிலக்குழு உறுப்பினர் ஸ்டாலின் குணசேகரன், சிறப்புரையாற்றினார். பாலதண்டாயுதத்தின் தியாகம் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. கூட்டத்தில் நகர செயலாளர், சுரேஷ்குமார், மாவட்டம் நிர்வாக குழு உறுப்பினர் மூத்த வழக்கறிஞர் பாபா மோகன், முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளர், மாதேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.