யானை பலி; விவசாயி கைது
சத்தியமங்கலம்: கடம்பூர்மலையில் உள்ள காடகநல்லியில், மக்காச்சோளக்காட்டில், ஒரு ஆண் யானை நேற்று முன்தினம் காலை இறந்து கிடந்தது. கடம்பூர் வனத்துறையினர் ஆய்வில், தோட்டத்து மின் வேலியில் சிக்கி பலியானது தெரிந்தது. விவசாயி புட்டுசாமி, 42, தலைமறைவான நிலையில் நேற்று அவரை கைது செய்தனர்.