மேலும் செய்திகள்
சரக்கு ஆட்டோ மோதி கூலி தொழிலாளி பலி
31-Dec-2025
பவானி: பவானி அடுத்த நசியனுாரை சேர்ந்தவர் ராஜம்மாள், 56: இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் நசியனுார் டவுன் பஞ்.,ல், துாய்மை பணியாளராக பணிபுரிந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம் போல் நசியனுார் சந்தை கடை பகுதியில் வேலை செய்து கொண்டு இருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.சித்தோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
31-Dec-2025